நாகர்கள் என்பவர்களும், திராவிடர்களும் ஒன்றுதான்


Who are the untouchables? Why are they untouchables?  அந்தப் புத்தகத்தை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். அதில் அவர் சொல்வார், திராவிடர்கள்  இந்தியா  முழுவதும்  இருந்தார்கள்  என்பதற்கு  அடையாளம் என்னவென்றால்நாகர்கள்  என்பவர்களும்திராவிடர்களும்  ஒன்றுதான்.
நாகர்கோவில், நாகமங்கலம், நாகப்பட்டினம் - நாகர், நாகர்கள்தான். நாகர்கோவில் என்றால், நாகராஜா கோவில் என்று பிறகு இவர்கள் திருத்திவிட்டார்கள். நாகர்களுக்கு என்ன மொழி என்றால், தமிழ் மொழி. திராவிட மொழி. கலாச்சாரம் அவர்களுக்குத் தமிழ்க் கலாச்சாரம்தான்.
ஒரே ஒரு கேள்வியை குருமூர்த்தி அய்யரிடம் கேட்கி றோம், அதற்கு அவர் பதில் சொல்லட்டும்.
ஒரு பார்ப்பனரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக்கூடிய துணிச்சல் இருந்ததா?
மத்தியில் காங்கிரசுக்கு மாற்று தேவை என்று சொன்ன பொழுது, ஒரு பார்ப்பனரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக்கூடிய துணிச்சல் இருந்ததா? யாரை தேடித் தேடிப் பிடித்தார்கள்? ஒரு மோடியைத்தான் தேடிப் பிடித்தார்கள். ஓடி, தேடி, மோடி.
அவர் என்ன சொன்னார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு - I also belong to the backward community    நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவன்தான் என்று.
திராவிடத்தினுடைய அடிப்படை என்ன? திராவிடம் என்பது கடவுளோ, மற்றவையோ அல்லசுயமரியாதை - அந்த சுயமரியாதைக்குக் குறுக்கே வருவது கடவுள் மற்ற வையெல்லாம். எனவே தடைகளை உடைக்கிறோம்.
திராவிடம் தமிழ்நாட்டோடு நிற்கவில்லை. திராவிடம் அகில இந்திய அளவிற்குப் பரவியிருக்கிறது. அரசியலை நிர்ணயம் செய்கிறது.
இட ஒதுக்கீடுபற்றி சொன்னாரே, ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலைவர் பார்ப்பனர் மோகன் பகவத், இட ஒதுக்கீடு கிடையாது என்றார்; இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்றார். உடனடியாக அதற்கு நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பைப் பார்த்தவுடன், அவர் தலைகீழாக பல்டி அடித்தாரா? இல்லையா?
இன்றைக்கு யாருக்காவது தைரியம் இருந்தால், இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டிலோ, அகில இந்திய அளவிலோ சொல்லக்கூடிய தைரியம் உண்டா?
இதே குருமூர்த்தி அய்யர், இங்கே மதுரையில் சில பேரை பிடித்து, நம்மாள்  சில  பேர் தங்களை  குறைந்த  விலைக்கு  விற்றுக்  கொண்டவர்கள், இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல வைத்தார்களே - அதனால் என்ன நடந்தது? அவர்கள் அடையாளம் தெரியாமல் போனார்கள்.
தொல்.திருமாவளவன் கட்சி இருக்கக்கூடாது, கிருஷ்ணசாமி கட்சி இருக்கக்கூடாது  - நாங்கள்தான் என்று குறைந்த விலைக்குத் தங்களை விற்றுக் கொண்டவர்கள் இப்பொழுது இருக்கிறார்களா? அடையாளம் தெரிகிறார்களா?
பெரியார் மண்! அம்பேத்கர் மண்!
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், இது பெரியார் மண்! பெரியார் மண் என்று சொன்னால், நான் ஏற்கெனவே சொன்னதுபோல அம்பேத்கர் மண்! அம்பேத்கர் மண் என்றால், பெரியார் மண்.
ஆகவே, இந்த மண்ணில் பா...வினுடைய வேலைகள் நடக்காது. நீங்கள் ஆசைப்படலாம்; உங்களுடைய கைகளில் பத்திரிகைகள் இருக்கிறது என்று இங்கிலீஷ் பத்திரிகையில் செய்திகளை வெளியிடலாம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்!
ஆனால், நண்பர்களே, நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அவர்களுடைய ஆசை ஒரு போதும் நிறைவேறாது.
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்,
BJP sees vacuum in tamilnadu politics will seek to capitalise அதாவது தமிழ்நாடு அரசியலில் ஒரு சூன்யம் - வெற்றிடம் இருக்கிறதாம். அந்த வெற்றிடத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களாம்.
அட, புத்திசாலியே, உனக்கு புத்தி இருந்தால், வெற்றி டத்தை முதலில் யாருக்காவது சொல்லலாமா? நீ போய் அல்லவா முதலில் உட்கார வேண்டும். அதைச் சொல்லிவிட்டாலே, வெற்றிடம் இல்லை என்றுதானே அர்த்தம்.
நீ என்ன புத்திசாலி? நாங்கள் இந்த நேரத்தில், இன்னாரைப் பிடிக்கப் போகிறோம் என்று சொல்லி காவல்துறையினர் சென்றார்கள் என்றால், எப்படி இருக்கும்?
உன் புத்திக்கும், உன் அறிவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? நீயெல்லாம் வரப்படுத்துகிற ஆசாமிகள்; வேதத் தைப் படிச்சான், அவன் படிச்சான், இவன் படிச்சான் என்று வரப்படுத்தியே ஒப்பித்துவிட்டுப் போனீர்கள். எங்கள் ஆட்கள் எல்லாம் சொந்தப் புத்தியில் சிந்திப்பவர்கள். இரண் டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
பீகாரில் நடைபெற்ற சுய அபிமான் பேரணி!
ஆகவேதான் நண்பர்களே! இதெல்லாம் நடக்காது. இந்த இயக்கம், பெரியாருடைய உணர்வு என்பது இருக்கிறதே, அது எந்தக் கட்சியிலும் இருக்கும். காங்கிரஸ், நிதிஷ்கு மாருடைய அய்க்கிய ஜனதா தளம், லாலுபிரசாத்தினுடைய கட்சி எல்லாம் சேர்ந்து ஓர் ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்திற்கு என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமா? சுய அபிமான். இந்தியில் சுய அபிமான் என்றால் என்ன அர்த்தம் - சுயமரியாதை பேரணி.
சுயமரியாதை இப்பொழுது எங்கு பார்த்தாலும் பரவிக் கொண்டிருக்கிறது
இப்பொழுது உத்தரப்பிரதேசத்தில் சுயமரியாதை - நமக்குக் கொஞ்சம் கொடுங்கள், நமக்குக் கொஞ்சம் கொடுங்கள் என்று சுயமரியாதை இப்பொழுது எங்கு பார்த்தாலும் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால், நீங்கள் எங்கெங்கு இருக்கிறீர்களோ, அங்கெல்லாம் ஆட்டம் உண்டு. ஏனென் றால், சுயமரியாதை என்பது இருக்கிறதே, திராவிடம் என்பது இருக்கிறதே, அது ஒரு சமூக விஞ்ஞானம்.
அந்த சமூக விஞ்ஞானத்தை உங்களால் ஒழித்துவிட முடியாது. விஞ்ஞானத்தை எதிர்த்து வேண்டுமானால், முட்டிக் கொள்ளலாம். நம்மூர்காரர்கள், விஞ்ஞானம் வளர்ந்தாலும், அஞ்ஞானத்தை விடாமல் செய்வதற்காக இவர்கள்,
பல்பை கண்டுபிடித்த ஆண்டும் - பெரியார் பிறந்த ஆண்டும் ஒன்று!
மின்சாரத்தை யார்  கண்டுபிடித்தது - கார்த்திகை அகலிலிருந்தா வந்தது? நன்றாக நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்தார். அவர் பல்பை கண்டுபிடித்த ஆண்டும் - பெரியார் பிறந்த ஆண்டும் ஒன்று. இரண்டும் வெளிச்சம் தரக்கூடிய விஷயம்.
ஏன் இன்னும் பெரியார் தேவைப்படுகிறார்? ஏன் இன்னும் இந்த இயக்கம் தேவைப்படுகிறது? என்று சொன்னால் நண்பர்களே, லைட் சுவிட்சைப் போடும்பொழுது கிராமத்தில், பல இடங்களில் தாய்மார்கள் எப்படி பழகிவிட்டார்கள் என்றால், சுவிட்சைப் போடுப்பா, இருட்டாக இருக்கிறது. அங்கே சுவிட்சைப் போடுகிறான்.
ஒருவர் ஆளுங்கட்சி - மற்றொருவர் எதிர்க்கட்சி !
எனக்கு நீண்ட நாள்களாக விளங்காத விஷயம் - அங்கே சுவிட்ச் போட்டால் இங்கே உள்ளவன் கன்னத்தில் போட்டுக் கொள்கிறானே - இரண்டுக்கும்  என்ன  கனெக்சன்எப்படி  அவன்  அவனுக்குத்   தனித்தனி சுவிட்ச்  வைத்திருக்கிறான்  என்றால்அதுதான்  மூடநம்பிக்கைஅதுதான் ஆரியம். அதைத்தான் ஒழித்தார் பெரியார். இன்றைக்கு நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட ஓர் இயக்கம் இந்த இயக்கம் - எனவே, இது வெறும் அரசியலில் வெற்றி - தோல்விகள் கிடையாது. அந்த வெற்றி உங்களுக்கு வர வாய்ப்பு கிடையாது. மாறி, மாறி அவர்களேதான் வருகிறார்கள். அவர்கள் ஆளுங்கட்சி - இவர்கள் எதிர்க்கட்சி. நீங்கள் என்ன செய்யலாம் நடுவில், இன்றைக்கு ஒரு செய்தி வந் திருக்கிறது, அதையும் உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.
இன்றைய பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி!
தமிழ்நாட்டிற்கு ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவரை ஆளுநராக  நியமிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றுக்   கொண்டிருக்கின்றன. அவருடைய பெயர் சங்கரமூர்த்தி - நமக்கு சங்கடமூர்த்தி - அவர்களுக்கு  சங்கரமூர்த்தி - ஆர்.எஸ்.எஸில் கொட்டை போட்டவர் - கருநாடகாவை சிறப்பாக ஆண்டார் பாருங்கள் எடியூரப்பா - அவர் ஊழலுக்கு மிகவும் அப்பாற்பட்டு ஆண்டவர் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். (சிரிப்பு) அவருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் இவர். அவரை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப் போகிறார்கள் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளிவந்திருக்கிறது.
திராவிடர் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்
எந்தக் காரணத்தை முன்னிட்டும், கருநாடகத்துக்காரரை தமிழ்நாட்டு ஆளுநராக ஏற்கக் கூடாது - ஏற்க முடியாது. அவர் ஆர்.எஸ்.எஸ். என்பது இரண்டாம் பட்சம் - இவர் இல்லை என்றால், இன்னோர் ஆர்.எஸ்.எஸ்.காரர் வரப் போகிறார், அது வேறு விஷயம். அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்கிறார்கள் கருநாடகத்தில். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம் என்கிறார்கள். அதை திசை திருப்புவது போன்று, எல்லா  நதிகளையும்  சேர்த்து ஒரே ஆணையம்  வைக்கவேண்டும் என்கிறார்கள். அவ்வளவு  கொடுமையை  செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்தக் கருநாடகத்துக் காரரைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் ஆளுநராக நியமித்தால் என்னாகும் நமக்கு? எனவே, முதலில் திராவிடர் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்
இது நடக்கக்கூடாது. மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், அதனை அவர்கள் கடுமையாக எதிர்த்த காரணத் தினால்தான், அவர் ஆளுநராக இங்கே வருவது தடுக்கப்பட்டது. அதை இன்றைய அரசு ஏற்கப் போகிறதா? ஊடகங்கள் மூலமாக, உங்கள் மூலமாக இந்தக் கேள்வியை இந்த மேடையில் வைக்கிறேன். இதைவிட மிகப்பெரிய ஆபத்து தமிழ்நாட்டிற்கு வேறு கிடையாது. ஆகவேதான், மிகத் தெளிவாக சொல்ல வேண்டிய செய்தி என்ன வென்றால், எந்தக் காரணத்தை முன்னிட்டும், கருநாடகத்திலிருந்து ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் இங்கே ஆளுநராக வரக்கூடாது.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்கள்; ஒன்று பி.ஜே.பி.யை வளர்ப்பதற்கு ஒரு வாய்ப்பு - அதைவிட மிக மோசம் என்னவென்றால், விவகாரம் நடந்துகொண்டிருக்கிறது நமக்கும், கருநாடகத்திற்கும் உச்சநீதிமன்றம் வரையில்.
எனவே, கருநாடகத்துக்காரர் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வரக் கூடாது.
எண்ணிக்கையில் அதிகம் இல்லையென்றாலும், மிகவும் உறுதியானவர்கள் எங்கள் இளைஞர்கள்!
எனவே, இதுபோன்ற சவால்கள் வந்தால்தான், எங்களுக்கு அவசியம் வேலை வரும். இனிமேல்தான் எங்களுக்கு வேலை அதிகம். நாங்கள் மிசா காலத்தையே பார்த்தவர்கள். ஆகவே, எல்லா கொடுமைகளையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள் பாருங்கள், அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது - ஆனால், மிகவும் உறுதியானவர்கள்.
எங்கள் பின்னால் வருகின்ற இளைஞர்களை நாங்கள் என்ன சொல்லி அழைப்போம். நீங்கள் வாருங்கள், உங்களை பஞ்சாயத்துப் போர்டு தலைவராக்குகிறோம்; உங்களை சட்டமன்ற உறுப்பினர் ஆக்குகிறோம்; உங்களை எம்.பி., ஆக்குகிறோம் என்று சொல்ல மாட்டோம். நீங்கள் வாருங்கள், உங்களை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கிறோம் என்போம். காரணம், போராட்டம், போராட்டம், போராட்டம்!
திராவிட உணர்வுகள் என்பது ரத்தத்தில் ஊறியது; அதை யாராலும் அழித்துவிட முடியாது
அது நம்முடைய வேலை - நாம் சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ் - நாம் பாதை போடவேண்டும். அந்தப் பாதையில் வேறு ஆட்கள் வந்து அமர்ந்துவிடக்கூடாது; இவர்கள் போன்றவர்கள் வந்து அமரவேண்டும். திராவிட உணர்வுகள் என்பது ரத்தத்தில் ஊறியது; அதை யாராலும் அழித்துவிட முடியாது.
பெரியார் என்கிற உணர்வை புதுப்பிக்கின்ற நாள் இந்நாள்!
ஆகவேதான், இந்தப் பெரியாருடைய 43 ஆம் ஆண்டு நினைவு நாளில் சூளுரைக்கிறோம். அவர் சொல்லிக் கொடுத்த சுயமரியாதையின் பெயரால் சூளுரைக்கிறோம். நீங்கள் எங்கோ இருந்து திடீரென்று இங்கு வந்து, யாரையோ மிரட்டி, ஏமாற்றி உங்களுடைய செல்வாக்கினால் அச்சுறுத்தி வந்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். அது நடக்காது. இதற்கு முன்னால் பல அச்சுறுத்தல்களைக் கண்ட இயக்கம் திராவிடர் இயக்கம். எனவேதான், உங்களுடைய ஆசை நிறைவேறாது என்று சொல்லி, பெரியார்! பெரியார்!! பெரியார்!!! என்கிற உணர்வுகள் இருக் கிறதே, அது வெறும் எழுத்தல்ல; அது வெறும் சிறு ஓவியம் அல்ல - அது ஆழமான உணர்வு. அந்த உணர்வை இன்றைக்குப் புதுப்பிக்கின்ற நாள் என்று கூறி, வாய்ப்பளித்த அத்துணை பேருக்கும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

என்னுடைய தோழர்கள், குறிப்பாக என்னுடைய சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களும், அய்யா தமிழறிஞர் அவர்களும், அம்மா பேராசிரியர் அவர்களும் அற்புதமான உரையை நிகழ்த்தியிருக் கிறார்கள். எல்லோருக்கும் நன்றி! உங்களுக்கும் ஆழ்ந்த நன்றி!

நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்!
ஆனால், இந்தப் பிரச்சினை இதோடு முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். இப்போதுதான் தொடக்கம். இனிமேல்தான் மிகச் சுவையான படலங்கள் பல இருக்கின்றனஏனென்றால், நம்முடைய எதிரிகள்நாம்  எந்த  ஆயுதத்தை  எடுப்பது என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்நாம் முடிவு செய்வதில்லைஆகவேதான்எதிரிகள் முடிவு செய்யட்டும்! அவ்வப்போது தேவைப்படுகின்ற ஆயுதங்களாக, அறிவாயுதங்களாக நீங்களும் எங்களுக்குப் பயன்படுவீர்கள் என்று சொல்லி முடிக்கிறேன்.
(24.12.2016 அன்று உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை)

அன்பார்ந்த இந்த எழுச்சிமிகு நிகழ்வின் தலைவர் நமது தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
நம்  அனைவரையும்  வரவேற்று சிறப்பித்திருக்கிற திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் வீ.அன்புராஜ் அவர்களே,
அறிமுகவுரையாற்றி இந்நிகழ்வை சிறப்பித்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இந்நிகழ்வில் பங்கேற்று உலகத் தலைவர் பெரியார் என் னும் நூலை வெளியிட்டு, சிறப்புரையாற்றி, பெருமை சேர்த்திருக்கின்ற தமிழறிஞர் அய்யா சிலம்பொலி செல்லப்பனார் அவர்களே,
பேராசிரியர் முனைவர் உலகநாயகி அவர்களே,
மருத்துவர் தீபக் அவர்களே, இன்பக்கனி அவர்களே, அன்புச்சகோதரர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,
இங்கே திரளாகக் கூடியிருக்கின்ற பெரியார் பெருந் தொண்டர்களே, தமிழ்ச் சொந்தங்களே, உடன் வந்திருக்கின்ற என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றரை மணிக்குள் இந்நிகழ்வினை நிறைவு செய்ய வேண்டும் என்று கழகத்தின் பொதுச்செயலாளர் தன்னுடைய வரவேற்புரையில் குறிப்பிட்டார். நம்முடைய ஆசிரியர் அவர்களும் இங்கே சிறப்புரை வழங்கவேண்டும்.
மீண்டும் ஒருமுறை ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி
ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பெரியார் திடலில் பேசுகிற ஒரு அளப்பரிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இந்நிகழ்வில் பங்கேற்கவேண்டும் என்று கவிஞர் சொன்னதும், உடனடியாக நான் ஒப்புக்கொண்டேன். மிகுந்த மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, பெருமிதத்தோடு, உடனே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டு உங்கள் முன் நின்று  கொண்டிருக்கின்றேன்இந்த வாய்ப்பினை  வழங்கியமைக்காக மீண்டும் ஒருமுறை அய்யா ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
பெரியார் திடலில் நிற்கிறபொழுதுதான் நமக்குக் கம்பீரம் பிறக்கும். ஏனென்றால், சுயமரியாதை உணர்வை நமக்கு ஊட்டிய மண் இந்த மண். வேறு எல்லா அரசியலும் பின் னுக்குத் தள்ளப்பட்டு, சுயமரியாதை மேலோங்கும்; அப்பொழுது நமக்கு இயல்பாகவே ஒரு கம்பீரம் பிறக்கும்.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பல பேர் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
துணைத் தலைவர் கவிஞர் இங்கே பேசுகிறபொழுது, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பல பேர் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று மிகுந்த வேதனையோடு பேசினார்.
இன்றைக்கு இந்த அரங்கத்தில் உலகத் தலைவர் பெரியார் என்கிற நூல் வெளியிடப்பட்டு இருக்கிறது. நம்முடைய சிலம்பொலியார் அவர்கள், அய்ந்து நிமிடம் பேசுவேன் என்று சொன்னார், கிட்டத்தட்ட ஒரு அரைமணிநேரம் மிக ஆழமான உரையை நமக்கு வழங்கினார்.
ஏனென்றால், பெரியாரியத்தைத் தொட்டால், அவ்வளவு சுருக்கமாக முடிக்க முடியாது. அந்தப் புத்தகத்தில் நம்முடைய ஆசிரியர் அவர்கள் முன்னுரையில் சொல்லியிருக்கிறார். பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்பது, தனி மனித வாழ்க்கைக் குறிப்புகள் அல்ல. இது ஒரு கோட்பாடு என்று சொல்லியிருக்கிறார்.
பெரியாரியம் என்பது உலகம் தழுவிய மானுடத்திற்கான ஒரு கோட்பாடு
ஆகவேதான் ஈரோட்டுப் பெரியாராக அறிந்த நாம் - தமிழர் தலைவராகப் புரிந்துகொண்ட நாம் - இன்றைக்கு உலகத் தலைவராக அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பெரியாரியம் என்பது உலகம் தழுவிய மானுடத்திற்கான ஒரு கோட்பாடு.
இதை அறிந்துகொள்ளாதவர்கள், புரிந்துகொள்ளாதவர்கள் தான் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிற ஒரு கருத்தியலை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். திராவிடம் என்பது அவர்களின் பார்வையில், தேர்தல் அரசியலிலிருந்து புரிந்துகொள்கிறார்கள். தேர்தல் அரசியல் என்பது திராவிடம் என்ற கோட்பாட்டிலிருந்து மாறுபட்ட ஒன்று.
திராவிடம் என்பது பெரியாரியம். பெரியாரியம் என்பது சுயமரியாதை கோட்பாடு. சுயமரியாதை எப்படி நமக்கு வரும்? பகுத்தறிவு இருந்தால்தான் வரும். ஆகவேதான், பகுத்தறிவு கருத்துகளை தந்தை பெரியார் பரப்பினார்; நமக்கு ஊட்டினார்.
பகுத்தறிவு என்பதுதான் சுயமரியாதைக்கான அடிப்படை
பகுத்தறிவைப் பரப்புகிறபொழுது, இயல்பாகவே ஆரிய எதிர்ப்பு அல்லது பார்ப்பன எதிர்ப்பு வருகிறது.
பகுத்தறிவைப் பரப்புகிறபொழுது, கடவுள் மறுப்பு வருகிறது.
பகுத்தறிவைப் பரப்புகிறபொழுது, மூடநம்பிக்கைகளை எதிர்க்கவேண்டிய தேவை எழுகிறது.
பகுத்தறிவைப் பரப்புகிறபொழுது, சமூகநீதிக்கான தேவை எழுகிறது.
பகுத்தறிவைப் பரப்புகிறபொழுது, ஜாதி ஒழிப்பின் தேவை வருகிறது.
பகுத்தறிவைப் பரப்புகிறபொழுது, பெண்கள் விடுதலை பெறவேண்டும் என்கிற தேவை எழுகிறது.
பகுத்தறிவு என்பது இத்தனைக் களங்களை உருவாக்குகிறது.
சுயமரியாதை என்பது உலகம் முழுவதும் வாழ்கின்ற ஒட்டுமொத்த மாந்தருக்கானது
பகுத்தறிவு என்பதுதான் சுயமரியாதைக்கான அடிப்படை.






நூல் : திராவிடத்தால் எழுந்தோம்!
ஆசிரியர் :  கி.வீரமணி  


Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!