Posts

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!

சுயமரியாதை என்பது குறிப்பிட்ட ஒரு ஜாதிக்கானது அல்ல . சுயமரியாதை என்பது குறிப்பிட்ட ஒரு இனத்திற்கானது அல்ல . சுயமரியாதை என்பது குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கானது அல்ல . சுயமரியாதை என்பது உலகம் முழுவதும் வாழ்கின்ற ஒட்டுமொத்த மாந்தருக்கானது . ஆகவே , தந்தை பெரியார் உலகத் தலைவராகிறார் . சுயமரியாதை என்கிற கோட்பாட்டை முன்மொழிந்ததால் , சுயமரியாதை என்கிற கோட்பாட்டை பரப்பியதால் , தந்தை பெரியார் உலகத் தலைவராகிறார் . உலகம் முழுவதும் வாழுகிற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும் . சுயமரியாதை என்றால் என்ன ? பிறர்   நம்மை அவமதிக்கின்ற பொழுது , நமக்கு எழுகின்ற கோபம்தான் சுயமரியாதையா ? என்றால் , இல்லை . தாழ்வெண்ணத்தை அகற்ற வந்த ஒரு போராளிதான் புரட்சியாளர் , உலகத் தலைவர் பெரியார் பிறர் நம்மை இழிவு செய்கின்றபொழுது , நமக்கு எழுகின்ற ஆத்திரம் மட்டும்தான் சுயமரியாதையா ? என்றால் , இல்லை . சுயமரியாதை என்பது நமக்குள் நம்மை அறியாமல் மண்டிக்கிடக்கின்ற தாழ்வெண்ணத்தைத் தூக்கி எறிதல் . தாழ்வு மனப்பான்மையை சிதற வைப்பது